மேகதாதுவில் ஆணை கட்டும் விவகாரம்… புதுச்சேரி அரசு எதிர்ப்பா..?

கர்நாடகாவின் மேகா தாது என்ற இடத்தில் அணை கட்ட மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அரசும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அமைச்சர் ரங்கசாமி மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேகதாது அணை கட்டுவது காரைக்கால் விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமருக்கு கடிதம் எழுத புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். தமிழக அரசைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!