கொரோனா தொற்று பரவுவதால் மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள தளர்வுகள் தொடரும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் 50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் 50 பேர் மற்றும் இறுதி சடங்கில் 20 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மளிகைக் கடைகள் உட்பட அனைத்து வகையான கடைகளும் வழக்கமான நேரங்களில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.