மேகதாது அணை கட்டுமானத்தை முடிப்போம் – கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ .9,000 கோடி மதிப்பிலான அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை யார் உண்ணாவிரதம் இருக்கிறாரா இல்லையா என்று கவலை இல்லை. காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமை உண்டு. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுமானத்தை முடிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!