அசாமில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 14 பேர் கைது

அசாம் மாநிலத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவுசெய்த 14 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில சிறப்பு டி.ஜி.பி.சிபி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துகள் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏதேனும் தவறான கருத்துக்களை பதிவிட்டால் சட்ட விரோதமான நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தார். தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது சட்டவிரோதமானது. இதனால், தேசிய நலனை பாதிக்கும் என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!