ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 25 இந்தியர்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையே, மேலும் 25 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 25 இந்தியர்கள் உட்பட மொத்தம் 78 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 800 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!