ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக முதலமைச்சர் கத்தார் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாம் சட்டம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்ற தடை குறித்த வரைவு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்த சட்ட வரைவு அவசர சட்டத்தால் அமல்படுத்தப்படுமா? அல்லது சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து அதை செயல்படுத்தலாமா? என விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். ‘ என அவர் கூறினார்.