காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்?.. சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு

பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசி வருகிறார். அவர் ஏற்கனவே கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவை சந்தித்துள்ளார்.

ஆனால் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்ப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அவரை கட்சியில் சேர்ப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் மற்றும் பிரியங்கா அவரை கட்சியில் இணைக்க முன்வந்தாலும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கட்சித் தலைவர் சோனியா காந்தி இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவை எடுப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!