டோக்கியோ பாராலிம்பிக்.. பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணீஷ்நர்வால் மற்றும் வென்ற வெள்ளி வென்ற சிங்கராஜ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி,

“டோக்கியோ பாராலிம்பிக்கின் மகிமை தொடர்கிறது. இளம் மற்றும் திறமையான வீரர் மணீஷ் நர்வால் சிறந்த சாதனை படைத்துள்ளார். அவர் தங்கப் பதக்கம் வென்றது இந்திய விளையாட்டுக்கு ஒரு சிறப்பான தருணம். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டார்.

“சிங்கராஜ் தனது சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் மற்றொரு பதக்கத்தை வென்றுள்ளார். அவரது சாதனையால் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகிறேன்” என பதிவிட்டார்.

Translate »
error: Content is protected !!