அசோக்நகர் அரசு பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்த சம்பவம்…..

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை அசோக்நகர் அரசினர் மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கார், மின்மாற்றி உள்ளிட்டவை சேதமடைந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி ஆகியோர் இன்றைய தினம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர். பின்னர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!