கொரோனாவால் வேலை இழந்து உணவு டெலிவரி செய்யும் செவிலியர்

கொரோனா தொற்றால் உயிரிழப்பும் ஏற்படும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் பலர் அவதிப்படுகின்றனர். தொடர் ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் கிடைத்த வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரத்தை சேர்ந்த ஒரு செவிலியர், சஞ்சுக்தா நந்தா (39). இவர் கொரோனாவால் வேலை இழந்து தற்போது உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்.

இதை பற்றி அவர் கூறும் பொது, கொரோனாவால் எனக்கு வேலை இல்லை.. என் கணவரும் வேலை இழந்து விட்டார். இதனால் எங்கள் வருமான நின்றுவிட்டது. அதனால் நான் உணவு டெலிவரிசெய்யும் வேலையை எடுக்க முடிவு செய்தேன்,” என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!