அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அக்டோபர் மாதத்தில் கொரோனா 3ஆவது அலை வருவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வழங்குவது மற்றும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

 

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!