பெரம்பலூர்: தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளி மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரம் நிலையில் அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவுசெய்தது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 3 வரை பள்ளி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!