ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை – அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?

உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் உச்வா பகுதியில் கணவன் மனைவியும் அவர்களுடைய 12 வயது மகன் மர்மநபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

வீடு புகுந்து அவர்களை கொலை செய்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக உச்வா பகுதி காவல்துறை அதிகாரி ராஜ் கிஷோர் பேசும்போது, கொலை செய்யப்பட்ட பிரேம் கிஷோரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர், நீண்ட நேரமாகியும் பால் பாக்கெட் வாசலில் கிடந்ததை பார்த்துள்ளார்.

அதை தொடர்ந்து அதே நபர் பிரேம் நம்பருக்கு கால் செய்துள்ளார். அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அவர்கள் வந்து பார்த்தபோது கடையுடன் கூடிய பிரேம் கிஷோரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற போது பிரேம் கிஷோர், அவருடைய மனைவி கீதா மற்றும் அவர்களுடைய மகன் நைய்திக் படுகாயங்களுடன் சடலமாக இருந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் சடலத்தையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!