கோவை கார் வெடி விபத்து வழக்கு: காவல்துறை தனிப்படை விசாரணை

கோவை கார் வெடி விபத்து வழக்கு காவல்துறை தனிப்படை விசாரணை முடிந்த நிலையில் வழக்கு முழுமையாக தேசிய முகமை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை காவல்துறை நடத்தியிருந்த வழக்கு விசாரணை கோப்புகள் ஒப்படைக்கப்பட்டன

கார் வெடி விபத்து வழக்கில் இதுவரை தனிப்படை காவல்துறை 52 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 65 நபர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களாக மொத்தம் ஆறு பேர் கைதாகினர் . முந்தைய ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை கார் வெடி விபத்து காவல்துறை தனிப்படை வசம் இருந்தது.

தனிப்படை காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் கார் வெடி விபத்தில் பலியான முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட ஃபெரோஸ் உள்ளிட்டவர்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என தெரியவந்தது.

கார் வெடி விபத்து நடந்த 12 மணி நேரத்தில் இறந்த நபரின் அடையாளம் அறிந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!