தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.  மேலும் அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் உரிய கடுமையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!