இந்தியாவில் புதிதாக 20,799 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரம் 702 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 180 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 48 ஆயிரம் 997 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!