தொடர் விடுமுறை – சென்னையில் மெட்ரோ சேவை நேரம் நீட்டிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி மக்கள் வெளியூர் செல்வதால் சென்னையில் இன்றிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. தொடர்‌ விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர்‌ செல்லும்‌ பயணிகளின்‌ வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இன்று நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. மேலும், மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்பட்டு வரும்‌ மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ இன்று மட்டும்‌ இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 10:00 மணி முதல்‌ நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ இயக்கப்படும்‌ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோவில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!