நார்வேயில் வில் மற்றும் அம்புகளால் மர்ம நபர் தாக்குதலில் 5 பேர் பலி

நார்வே தலைநகர் ஒஸ்லோவின் தென்மேற்கில் உள்ள கேன்ஸ்பெர்க்கில் மர்ம நபர் ஒருவர் தீவிரவாத தாக்குதலை நடத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த இடத்தில் அம்புடன் வந்த அந்த நபர் மக்களை நோக்கி தனது அம்புகளை குறிவைத்தார். மேலும், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் 37 வயதான டேனிஷ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர்  எர்னா சோல்பெர்க் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் “திகிலூட்டும்” என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!