லக்கிம்பூர் வன்முறை- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 10 கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இதன் வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விசாரிக்க உள்ளது.

Translate »
error: Content is protected !!