சிம்பு படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாக தாயார் உஷா பேட்டி…

சிலம்பரசன் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக அவரது தாயார் உஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்திரன் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் சிலம்பரசன் படம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த உஷா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒவ்வொரு சிலம்பரசன் நடித்த படங்கள் ஆரம்பிக்க பொழுதும் பஞ்சாயத்துக்கு எங்களை கூப்பிட்டு பல கோடிகளை பெற்றுக் கொண்ட பிறகுதான் படத்தில் நடிப்பதற்கு அனுமதிக்கிறார்கள். அதேபோல முடியும் பொழுதும் படத்தை வெளியிடுவதற்கு ரெட்டி என்ற பெயரில் படத்திற்கு தடைப்போட்டு பல கோடி தரவேண்டும் என்று எங்களை மிரட்டுகிறார்கள் என பரபரப்பு குற்றம்சாட்டினார்.

தற்போது அருள்பதி என்பவர் தமிழ் திரைப்பட நடப்பு வினியோகஸ்தர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து ஒரு இருபது, இருபத்தைந்து பேர் வைத்து சிலம்பரசன் எந்த படத்தையும் ரிலீஸ் பண்ணவிடமால் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

Translate »
error: Content is protected !!