மலையேற்ற வீரர்கள் 17 பேர் மாயம் – 11 பேர் சடலமாக மீட்பு

இமாச்சலபிரதேசத்தில் மாயமான 17 மலையேற்ற வீரர்களில் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் ஹர்ஷிலியில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் என 17 பேர் கொண்ட குழு கடந்த 14-ஆம் தேதி மலையேற்ற பயணத்தை தொடங்கினர்.

இந்நிலையில், இவர்கள் கடந்த 18ம் தேதி லம்காகா பகுதியில் வீசிய கடுமையான பனிப்பொழிவில் சிக்கி மாயமாகினர். இதை அறிந்த மீட்பு குழு ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்பு குழு மீட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!