சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

ஆந்திராவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்களது செல்போனில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான தகவல் பரிமாற்றம் இருந்ததை கண்டறிந்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 18 லட்சத்து 65 ஆயிரம் பணம் மற்றும் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், 4 கிலோ கஞ்சா, நான்கு லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!