குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 140 ஆக குறைந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று புதிதாக ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 13 ஆயிரத்து 790 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக இருந்த நிலையில் நேற்று 141 ஆக குறைந்துள்ளது.

Translate »
error: Content is protected !!