2021 அக்டோபர் மாதத்தில் மட்டும் 29,69 ஆயிரம் பயணம்…

2021 அக்டோபர் மாதத்தில் மட்டும் 29 இலட்சத்து 69 ஆயிரம் பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21 முதல் மீண்டும் தொடங்கியது.  ஜூன் 21 முதல் அக்டோபர் 31 வரை மொத்தம் ஒரு கோடியே ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 685 பேர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அக்டோபர் 13 ஆம் தேதி அன்று ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 630 பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். ஜூன் 21 முதல் அக்டோபர் 21 வரை முக கவசம் அணியாமல் பயணம் செய்த 462 பேரிடம் இருந்து 92,400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!