உத்தரபிரதேசம்: டீக்கடைக்குள் புகுந்த லாரி.. 6 பேர் பரிதாபமாக பலி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரின் பஹ்வர்கோல் பகுதியில் உள்ள அக்ரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடையில் 10க்கும் மேற்பட்டோர் டீ குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீ கடையில் நின்று கொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

Translate »
error: Content is protected !!