படகில் சென்று மழை வெள்ளத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
சென்னையில் கடந்து 2 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை புளியந்தோப்பு கன்னிகா புரத்தில் மழைநீர் தேங்கி உள்ள இடத்தில் படகு மூலம் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதை தொடர்ந்து துறைமுகம் பகுதி யானைக்கவுனி போலீஸ் ஸ்டேஷன் அருகாமையிலுள்ள வுட் வொர்க் இரண்டாவது தெரு பாதையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி அவர்களது குறைகளை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தார்.