S.A.சந்திரசேகர் கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட திருச்சி R.K.ராஜா ராஜினமா செய்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்

நடிகர் விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட திருச்சி R.K.ராஜா தான் அப்பொருப்பில் இருந்து ராஜினமா செய்து கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக திருச்சியை சேர்ந்த ஆர்.கே ராஜா பொறுப்பு வகிப்பார் என்று எஸ்.ஏ சந்திரசேகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து ஆர்.கே ராஜாவிற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது,அதே நேரம் 2014ம் ஆண்டு நில மோசடி தொடர்பான வழக்கின் விசாரணைக்காக ஆர்கே ராஜாவின் மனைவி மாமனார் மற்றும் மைத்துனர் விசாரணைக்காக திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் ஆர்.கே ராஜா தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக கூறி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆர்.கே ராஜா எஸ்.ஏ சந்திரசேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தான் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து கொள்வதாக  தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!