மராட்டிய மாநிலம் கோலாப்பூர் அருகே இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2.36 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.