மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,500 கிலோ போதை பொருள் பறிமுதல் – 2 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவன் மாவட்டத்தில் உள்ள எரண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் தடுப்பு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!