அருணாச்சல பிரதேசம்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பேர் பலி

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லாக்கிங் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என தாக்குதல் ஏற்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!