கர்நாடகாவில் மழைவெள்ளத்தில் சிக்கி 24 ஆடுகள் உயிரிழப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சித்ரதுர்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் விளைவாக சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா தேக்கடலவாடி கிராமத்தில் 14 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் விவிதாடஹள்ளி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி 12 ஆடுகள் பலியாகின. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 4 ஆடுகளை விவசாயிகள் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!