சாத்தபுத்தூர் ஏரியின் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி – கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட  சாத்தபுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள வயல்வெளிகளில்  கடந்த 2 தினங்களாக பெய்த  கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏரிக்குள் மழை சென்று ஏரி நிரம்பி வெளியேறிய உபரிநீர் கிராமத்துக்குள் புகுந்தது.  இதனால் கிராமத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினரும் சேர்ந்து ஏரி நீர் செல்லும் வாய்க்கால்களை சீர்செய்து கிராமத்திலுள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!