ஆளுநர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் சட்டமன்ற தீர்மானத்தின் மீது மாநில ஆளுநர் விரைவாக முடிவு எடுக்கவேண்டும்என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள லயோலா கல்லூரியில் சிவகாமி புத்தகாலயம் மற்றும்  ஆர் ஆர் ரெப்லக்ஷன்ஸ் சார்பில் எஸ்.இரத்தின வேல் ராஜன் எழுதிய உருப்படியாய் ஒரு நிமிடம் என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து தலைமை தாங்கி நூலினை வெளியிட்டார். கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். உருப்படியாக ஒரு நிமிடம் என்னும் நூலின் வெளியீட்டு முதல் பதிப்பை  சால்காம்ப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சசிகுமார் கெந்தம் பெற்று கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!