ராணுவ வீரர் மோகித் ரத்தோர் முதலிடம் பிடித்து பதக்கம்

தஞ்சையில் நடந்த மாநில அளவிலான 20 கிமீ தூரத்திற்கான மாரத்தான் போட்டியில் ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் மோகித் ரத்தோர் முதலிடம் பிடித்து பதக்கம் வென்றார்.

தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில், தஞ்சையில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான இப்போட்டி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற ஆண்களுக்கான இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 750 வீரர்கள் பங்கேற்றனர். அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கி வல்லம் பெரியார் சிலை வரை சென்று மீண்டும் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தனர் இப்போட்டியில் ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் மோகித் ரத்தோர் முதலாவதாக வந்து பதக்கத்தை வென்றார். அவருக்கு காவல்துறையினர் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் நன்கொடை வழங்கி பாராட்டினார்கள்

 

 

Translate »
error: Content is protected !!