அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள், மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 24, 25, 26 ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலை பொருத்தவரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடுத்த 5 நாட்களுக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!