2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருந்தாலும், தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் எனவும், அதில் கொரோனா நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!