விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வேண்டும் – பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு தமிழ்நாடு பாஜக விவசாய அணி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதே போன்று பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழக அரசு அதனை குறைக்க வில்லை உடனே பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜக-வினர் அறிவித்தனார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் நின்றவாறு தமிழக அரசுக்கு எதிப்புகளை தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!