காஷ்மீர் இளைஞர்களே ஆயுதம் ஏந்த தயாராக உள்ளனர் – உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா நேற்று காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள டோடா பகுதியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் உமர் அப்துல்லா கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் உமர் அப்துல்லா பேசுகையில், “எங்கள் ஆட்சியில் பயங்கரவாதம் அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது. இந்த பயங்கரவாதிகள் வெளியில் இருந்து வரவில்லை. காஷ்மீர் இளைஞர்களே பயங்கரவாதிகளாக ஆயுதம் ஏந்த தயாராக உள்ளனர்” என்றார்.

Translate »
error: Content is protected !!