தண்ணீரில் மிதக்கும் ஓ எம் ஆர் சாலை

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூர், கேளம்பாக்கம், நாவலூர், தாழம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் ஆற்று வெள்ளம் போல் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது,

தொடர் மழையால் திருப்போரூர் முருகன் கோவிளிலிருந்து ஓ எம் ஆர் செல்லும் பாதை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்,

இதேபோன்று கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை மழைநீர் சூழ்ந்துள்ளதால் வான ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர், இதேபோல ஓஎம்ஆர் சாலையில் உள்ள விஜயசாந்தி தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் தண்ணீர் புகுந்ததால் அனைத்தையும் சாலையோரங்களில் நிறுத்தி பாதுகாத்து வருகின்றனர்,

மழை நீர் தேங்கியுள்ளதை ஊராட்சி நிர்வாகம் விரைவில் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் மற்றும் பொது மக்களும்  வேண்டுகோள் வைக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!