ஹரியானா.. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 6 பேர் பலி

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள புண்ட்ரியில் இன்று காலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 4 பேர் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சட்ரோத் காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சபிடோனைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!