இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாத்திற்கு பிறகு குறைந்த அளவாக நேற்று 6,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 10,207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 40 லட்சத்து 28 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 99,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 267 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 69 ஆயிரம் 247 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!