மெகா தடுப்பூசி முகாம்-மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம்

 

தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா சிறப்பு முகாம்கள் வருகிற 4-ம் நாள்  நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் அது சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்துக்கு 2 முறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா சிறப்பு முகாம்கள் வருகிற 4-ம் நாள் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!