எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவருமான இளங்கோவன், வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 30-க்கும் மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவன் வீடு உள்ளிட்ட 26 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றினர். அதுமட்டுமல்லாமல் 70 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீட்டு ஆவணங்களையும் கைப்பற்றிய நிலையில், வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த லாக்கர் சாவி மூலம், நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.