தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளது மதுரை

 

தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மதுரை விமானநிலையத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் பின் தங்கியே உள்ளது என கவலை தெரிவித்தார்.

 

 

Translate »
error: Content is protected !!