வெள்ள நீர் வீடுகளுக்குள் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தொடர் கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்து ஊரை சுற்றி நான்கு புறங்களிலும் தண்ணீர் வந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஒருபுறம் கரை உடைந்து மறுபுறம் சாலை துண்டிக்கப்பட்டதால்  மருத்துவமனைக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் வெளியே செல்ல முடியாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். மேலும் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மருத்துவமனைக்குச் செல்ல வழியில்லாமல் துண்டிக்கப்பட்ட சாலை வழியாக ஆற்றை கடந்து சென்ற நிகழ்வு நடைபெற்றதாகவும் குறிப்பிடும் அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தங்கள் பகுதிக்கு உள்ள வெள்ள நீரை வெளியேற்றி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!