அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினம்

 

அம்பேத்தகர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு தினத்தை ஒட்டி, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் அம்பேத்கரின் புகைப்படம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கழக துணை செயலாளார் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!