கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50,000 நிதியுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ.50,000 நிதியுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், கொரோனா நிவாரணப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் வழங்கப்படும்.

இறந்தவரின் விவரங்கள், இறப்பு நிகழ்ந்த மருத்துவமனை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்பான விவரம் , வாரிசுகளின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த https://serviceonline.gov.in/tamilnadu/renderApplicationForm/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை பரிசீலித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!