விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து.. ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம்..!

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.

முன்னதாக, பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!