தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு

 

தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். “ஜஸ்டிஸ் ஃபார் தி ஜட்ஜ்” என்ற தலைப்பில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் சுயசரிதை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதியாக தனது அனுபவங்களின் பல நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அப்போது உச்சநீதிமன்றத்தில் பெண் ஊழியர் ஒருவர், தனக்கு எதிராக அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து பேசிய அவர், தனது பணிகளை முடக்குவதற்காகவே தமக்கு தெரிந்த சிலரின் மூலம் பாலியல் புகார் அளிக்கப்பட்டதாகவும், இந்த விவரங்களை விசாரணையின் போது தெளிவுப்படுத்தியதாகவும் கூறினார். இறுதியாக தான் குற்றமற்றவன் என்று தீர்ப்பு வந்ததாகவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!