கம்பத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் துபாய் செல்ல தேனி பாராளுமன்ற உறுப்பினர் நிதி உதவி வழங்கினார்

துபாயில் நடைபெறவிருக்கும்  ஊனமுற்றோருக்கான Divyang Premier League ( DPL) கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி (சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்) சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேனி மாவட்டம்  கம்பம், தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்  தூபாய் சென்று விளையாட போதிய நிதியுவியின்றி சிரமப்படும் தகவல் அறிந்து தேனி நாடாளுமன்ற உறுப்பினர், ரவீந்திரநாத், அவர்கள் சிவக்குமார் அவர்களை அழைத்து துபாய் சென்று விளையாட மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் வாங்க தேவையான நிதியுதவியினை வழங்கினார். இந்நிகழ்வில் உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு #PRP_அழகுராஜா,Ex.MC., தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு S_தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Translate »
error: Content is protected !!